Monday, March 22, 2010

556. நமக்கு எதிரி நாம் தான் - சேப்பாக்கம் IPL -CSK vs KXIP

(நேற்று) ஞாயிறு காலை எழுந்தவுடன் அன்று சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த (சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஆன) ஐபிஎல் டி-20 மேட்ச்சை அரங்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. எழுந்திருந்தபோதே லேசாக இருந்த மைக்ரைன் காரணமாக இருக்கலாம்!

சென்னை ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாவற்றுக்கும் டிக்கெட் விற்பனை முடிந்து விட்ட நிலையில், நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு கேட்டதில், ஆபத்பந்தவனாக, அனாதரட்சகனாக, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் 2 காம்ப்ளிமெண்ட்ரி டிக்கட் கிடைச்சுது, உனக்குத் தான் ஃபோன் பண்ணலாம்னு இருந்தா, நீயே பண்ணிட்டே!!" என்று நெஞ்சில் பாலை வார்த்தான் :-) மாத்திரையை போட்டு மைக்ரைனை விரட்டி, 3-4 வருடங்களுக்குப் பின் சேப்பாக்கம் செல்லத் தயாரானேன் (நண்பனுடன்).

அரங்கம் அமைந்துள்ள பெல்ஸ் சாலையில், அரங்கத்திலிருந்து எழுந்த பேரிரைச்சலாலும், சிவமணியின் டிரம்ஸாலும், மிதமான நிலநடுக்கத்தை உணர முடிந்தது! கொடி, தொப்பி, டி-ஷர்ட், bandana, ஊதுகுழல் விற்பவர்கள், 10 ரூபாய்க்கு மூஞ்சியில் படம் வரைந்து உங்களை CSK வெறியராக மாற்றுபவர்கள், ரசிகர் கூட்டம் என்று ஜேஜே என்றிருந்த அச்சாலையில் நடக்கையில் உற்சாகம் பற்றிக் கொண்டது. அரங்கத்தில்நுழைவதற்கு முன், செலவழித்த ஒரு 30 நிமிடங்கள் இவ்விடுகைக்கு தேவையில்லாதது ;)

வாலாஜா சாலையில் இருந்த D-Stand நுழைவு வாயிலில் புகுந்து, செக்யூரிட்டி செக் முடிந்ததும், பச்சை பசேலென அரங்க (ரங்கநாதரும் பச்சை மாமலை மேனி தான்!) தரிசனம்! ஃப்ளட் லைட் ஒளி வெள்ளம் இரவை பகலென ஏமாற்றிக் காட்டியது. அரங்குக்கு வெளியே திருமங்கையாழ்வார் பாடிய திருவல்லிக்கேணி, உள்ளே அமெரிக்கா! உட்சூழல், தோற்றத்தைச் சொல்கிறேன். ஹைடெக் காபி மெஷின், குளிர்பானங்கள், அக்வாஃபினா, சியர் லீடர்ஸ், அதிரும் ராக் இசை என்று அமெரிக்கத்தனம் தெரிந்தாலும், கழிவறைப்பக்கம் சென்றவுடன் சந்தேகம் தீர்ந்து விட்டது!

(KXIP) சியர் லீடர்சுக்கு அருகில், நேர் எதிராக இருக்கையை தேர்ந்தெடுத்தேன். ஐபிஎல்-லை பொருத்தவரை கிரிக்கெட் மட்டுமே நோக்கமாக இருப்பது தகாத ஒன்று! இதை மகான் லலித் மோடியே திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்!

டாஸ் வென்ற சென்னை அணி, பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது! பஞ்சாப் ஆட்டத்தில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை. மற்ற வீரர்கள் சொதப்பியதில், விக்கெட் ரெகுலராக விழுந்ததில், யுவராஜ் கூட ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் தத்தளித்தார், 2 அட்டகாசமான சிக்ஸர்களை அடித்தாலும்! பஞ்சாபின் சொதப்பல் தந்த கடுப்பை பெருமளவு குறைத்த பெருமை சிவப்பு உடையில் ஜொலித்த பஞ்சாப் சியர் லீடர்ஸையே சாரும்! சியர் லீடர்ஸ் ஆட்டம், பஞ்சாப் அணியின் ஆட்டத்தை விட எவ்வளவோ மேல்! தமிழ் குத்துப் பாட்டுகளுக்கு (அப்டி போடு போடு, நாக்கமுக்க, ஓடிப்போயி, வேர் இஸ் தி பார்ட்டி..) அவர்கள் improvise பண்ணி ஆடியது சூப்பர் :-) (ஆடிய மூன்றில், 2 பிளாண்ட், 1 புருனட் என்பது வாசகர்களுக்கு கூடுதல் தகவல்!)

சியர் லீடர்ஸே இப்படி imrpovise பண்ணி கலக்கியபோது, பஞ்சாப் சிங்கங்கள் ஒன்று கூட improvise பண்ணி அதிரடியாக ஆடாததற்குக் காரணம், தோனியில்லாத சென்னை சோனிகளுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று அவர்கள் நினைப்பாக இருக்கலாம் :-)

யுவராஜ் 43 (28 பந்துகள்); பஞ்சாப் 136 ரன்களில் சுருண்டது! முரளி தன் உலகத்தரத்தை நிரூபிக்கும் வகையில் அபாரமாக பந்து வீசியது தான் ஹைலைட் (4-0-16-3) ஆஹா, சென்னை மிக எளிதாக வென்று விடும் என்று தான் எண்ணினேன், பார்த்திவ் படேலும், ஹெய்டனும் 6.5 ஓவர்களில் 50 தொட்டபோது! சென்னை அணி 12.3 ஓவர்களில் 96-2 (ரெய்னா அவுட்). தேவையான ரன் ரேட், 5.47 மட்டுமே! (8 விக்கெட்கள் வைத்துக் கொண்டு டெஸ்ட் மேட்ச்சில் கூட இவ்விலக்கு சுலபமானது).

சென்னைக் கோமாளிகள் முரளி விஜயும், பத்ரிநாத்தும் மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடியதில், ஸ்கோர் 104-4, பா.படேலும், கோனியும் தொடர்ந்து வெளியேறியபோது, ஆட்டம் TIE ஆகப் போகிறது என்று விளையாட்டாய் நண்பனிடம் சொன்னேன், அவன் என்னை விட டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக (நாம் வெல்ல) ஒரு வாய்ப்பு (2 பந்துகள் ஒரே ஒரு ரன்!) இருந்தபோது, மற்றொரு சென்னைக் கோமாளி அஷ்வின், ஒரு பந்தில் ரன் எடுக்க முடியாமல், அடுத்த பந்தில் அவுட்டானார். பஞ்சாப் தரப்பில் ரமேஷ் போவாரும், தென்னாப்பிரிக்க வீரர் யுவான் தெரானும் சிறப்பாக பந்து வீசினர்!

அடுத்து நடந்த சூப்பர் ஓவர் அவலத்தைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவுமில்லை! சென்னை அணி மண்ணைக் கவ்வியது :-( இப்படியாக சில ஆண்டுகளுக்குப் பிறகான என் சேப்பாக்கம் விஜயம் சோகத்தில் முடிந்தது!

இறுதியாக, டிவிட்டரில் கிரிக்கெட் விமர்சக "ஐயா" ஒருவர், 50 ரன்கள் அடித்து, 121 வரை ஸ்கோரை இட்டு வந்த பா.பட்டேல் தான் சென்னைத் தோல்விக்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டார்! சே, இவரை மாதிரியெல்லாம் வித்தியாசமாக, புத்திசாலித்தனமாக நம்மால் யோசிக்க முடியலையே என்று ஒரே ஆதங்கமாகப் போய் விட்டது ;-)

எ.அ.பாலா

11 மறுமொழிகள்:

said...

test - for a change its me.

ஆயில்யன் said...

நேரிடையாக பார்த்து ரசித்த மேட்சா அது :)

பை தி பை தோல்விக்கு காரணம் திரிஷா என்றும் கூட டிவிட்டரில் கூறிக்கொண்டிருந்தோமே அதை கவனிக்காததும் ஏனோ ? :) (ஜஸ்ட் ஃபார் இன்போ - திரிஷா கூட மேட்ச் பாக்க வந்தாங்களாம்)

enRenRum-anbudan.BALA said...

நன்றி, அனானி, ஆயில்யன் !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

திரிஷா முதல்நாளே மேட்ச் பார்க்க வந்தால்தான் தல தவறு,

ஸ்ரீ.... said...

தலைவரே,

அடிக்கடி எழுதுங்க! அடுத்த மேட்ச் ஜெயிப்போம்.

ஸ்ரீ....

A Simple Man said...

you are absolutely correct. It was due to chennai chokers CSK lost the match that could have been easyly won.
pls visit http://iamverysimple.blogspot.com for daily predictions
Thanks,
ASM

enRenRum-anbudan.BALA said...

நன்றி, Sureஷ், த்ரிஷா வேண்டாம், லஷ்மிராய் wanted :-)

enRenRum-anbudan.BALA said...

ஸ்ரீ,
வருகைக்கு நன்றி. எழுத முயற்சிக்கிறேன். ஆபிஸ் வேலையும் சோம்பேறித்தனமும் காரணம்!

enRenRum-anbudan.BALA said...

A Simple man,
Some overhauling has to be done, Ashwin & Murali Vijay are to be dropped for 2-3 matches, CSK cant do anything worse considering the manner in which it lost the game to RCB in Bangalore yesterday.

A Simple Man said...

yes. seems many of the Chennai guys plays for other franchises and those playeing for CSK are not that effective. y don't they atleast try ICL return ganapathy and perera could also help. A long way to go.. not sure if they reach semis.

A Simple Man said...

Good to know you tweeted my opinion.
like minds :-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails